இலங்கைசெய்திகள்

30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

Share
9 61
Share

30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

கிளிநாச்சி (Kilinochchi)- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாமல் இருக்கும் மக்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் கிளிநாச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நேற்று (30-01-2025) முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முகமாலை, இத்தாவில், வேம்பெடுகேணி போன்ற பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களினுடைய மீள்குடியேற்றம் மற்றும் ஏற்கனவே மீள்குடியேறிய மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேற்குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 30 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவும் 60 வரையான குடும்பங்கள் தங்களுடைய காணிகளை பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...