9 61
இலங்கைசெய்திகள்

30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

Share

30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

கிளிநாச்சி (Kilinochchi)- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாமல் இருக்கும் மக்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் கிளிநாச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நேற்று (30-01-2025) முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முகமாலை, இத்தாவில், வேம்பெடுகேணி போன்ற பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களினுடைய மீள்குடியேற்றம் மற்றும் ஏற்கனவே மீள்குடியேறிய மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேற்குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 30 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவும் 60 வரையான குடும்பங்கள் தங்களுடைய காணிகளை பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...