tamilni 102 scaled
இலங்கைசெய்திகள்

உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி

Share

உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் ஆயுதப் படைகளின் முதலாவது சிறப்பு படைகளின் தளபதி விசேட அதிரடிப்படையின் தளபதியாக கடமையாற்றிய இலங்கையரான ரனிஷ் ஹேவகே உட்பட இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் ரஷ்ய இராணுவ தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் கறுப்பு என்று அழைக்கப்படும் ரஷ்யர்களின் இலக்காகவும் ரனிஷ் ஹேவகே பெயரிடப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை காலாட்படை மற்றும் கொமாண்டோ படையில் பயிற்சி பெற்று, சட்டப்பூர்வமாக வெளியேறிய பின்னர் உக்ரைனிய இராணுவத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உறுப்பினராக சேர்ந்தார்.

போர் முனையில் ஒன்பது முறை காயம் அடைந்து உக்ரைனின் பாதுகாப்பிற்காக போராடிய ரனிஷ் ஹெவகே, அந்நாட்டு இராணுவத்தில் கேப்டன் டென்டிஸ் என்ற பெயரில் அறிமுகமானார்.

உக்ரைனின் முன்னோக்கி பாதுகாப்பு எல்லைக்கு அப்பால் நடவடிக்கையில் இணைந்த ரனிஷ் ஹெவகேவின் கீழ் உள்ள பிரிவில் பிரியந்த என்ற இலங்கை இராணுவ வீரர் இணைந்தார்.

போர் முனையில் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால், உக்ரைன் படையினர் இறந்த இராணுவ வீரர்களின் உடலை எடுக்க முன்வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...