28 9
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள்

Share

இலங்கையில் பலரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: அடுத்தடுத்து உயிரிழந்த மூன்று சகோதரிகள்

புத்தளம் – மதுரங்குளி, கந்ததொடுவாவ கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வார காலப்பகுதியில் மூன்று சகோதரிகளும் திடீரென உயிரிழந்ததையடுத்து பிள்ளைகளும், உறவினர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 77 வயதான வயலட் பீர்ஸ், 70 வயதான லூசி பீர்ஸ் மற்றும் 67 வயதான அன்னி பீர்ஸ் ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் திருமணமான பெண்கள் என்பதுடன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கந்ததொடுவாவ கிராமத்தில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த சகோதரிகளின் தங்கையான 67 வயதான அனி பீர்ஸ் திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மூத்த சகோதரி வயலெட் பெசிர்ஸினும் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு சகோதரிகளின் மரணத்தால் மிகவும் வேதனையடைந்த மற்றுமொரு சகோதரியான 70 வயதான லூசி பீர்ஸ் மூன்று நாட்களுக்கு பின்னர் திடீரென உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மூன்று சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே அற்புதமான சகோதர பந்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதல் தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இவர்களின் திடீர் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...