பூநகரி முழங்காவில் பகுதியில் 3 கடைகள் தீக்கிரையாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
முழங்காவில் பகுதியில் இருந்த குறித்த இந்த மூன்று கடைகள் இன்று நண்பகல் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன.
இதனால் இரு பலசரக்குக் கடை நிலையம் மற்றும் அலைபேசி நிலையம் என்பன தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.