tamilni 14 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

Share

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) அச்சுவேலி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் ஊடகவியலாளர் ஒருவரின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் வீட்டில் இருந்த உடமைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவினரை அழைத்து வந்து ஊடகவியலாளரின் வீட்டை அடையாளம் காட்டியவர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து யார் தலைமையில், எதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் வந்துள்ளது என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் த.பிரதீபனின் உயிருக்கு அச்சுறு்த்தல் விடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து இன்று (19) யாழ்.பிரதான பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...