26 4
இலங்கைசெய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

Share

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சுயேட்சை குழுக்கள், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 08க்கு இடையில் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

இதன்படி மட்டக்களப்பு (22), யாழ்ப்பாணம் (22), திகாமடுல்ல (37), திருகோணமலை (17) மற்றும் கொழும்பு (17) ஆகிய மாவட்டங்களில் அதிகளவு குழுக்கள் வைப்புகளை செய்துள்ளன.

இதுவரை , மொத்தம் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் ஆணையத்திடம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதியன்று வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றன.

அத்துடன் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...