24 6621d3bf0f02f
இலங்கைசெய்திகள்

அவசர நேரத்தில் சிக்கித்தவித்தவர்களில் ஒருவரா..!

Share

அவசர நேரத்தில் சிக்கித்தவித்தவர்களில் ஒருவரா..!

இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றமையை காணலாம். அவ்வகையிலேயே மருத்துவத்துறையானது அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இன்று மருத்துவத்துறை வளர்ச்சி காரணமாக எண்ணிலடங்கா சாதனைகளை உலகம் கண்டு வருகின்றது.

நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் சேர்ந்ததே மருத்துவம் ஆகும்.

மருத்துவமானது நோய்களை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்ற அறிவியல் செயற்பாடு எனலாம்.

மருத்துவம் என்பது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், நோய் வராமல் தடுத்தல், நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு உடல்நலச் செயல்முறைகளை உள்ளடக்கும்.

மருத்துவத்துறையில் நோய் நீக்கும் வைத்தியர்களும், வைத்தியசாலைகளும் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத விடயமாக இருக்கிறது. அதேநேரம் மருந்தகங்களும் முக்கியமல்லவா?

வைத்தியசாலைகளை அடுத்து மருந்தகங்களை நம்பியே பலரும் தமது அன்றாட மருந்து தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.

தற்காலத்தை பொறுத்த வரையில் அடிப்படை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும், அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

எனவே மருந்தகங்கள் மூலமாக தமது மருந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள் ஏராளம். ஆனால் கொழும்பு உள்ளிட்ட பரபரப்பான நகரப் பகுதிகளை தவிர வேறு எத்தனை பகுதிகளில் 24 மணிநேரமும் இயங்கும் மருந்தகங்கள் இருக்கின்றன என்று பார்த்தால் கேள்விக்குறியே.

குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை இரவு நேரத்தில் இக்கட்டான சந்தர்ப்பத்தில் மருந்து இன்றி தவிக்கும் போது மருந்துகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எந்தெந்த பகுதி மக்களுக்கு கிடைக்கிறது?

வைத்தியர் வழங்கிய பற்றச்சீட்டு இருந்தாலும் அவசர தேவைக்கு இரவு நேரங்களில் இயங்கும் மருந்தகங்கள் பல பகுதிகளில் கண்ணில் எட்டும் தூரத்திற்கு இருப்பதில்லை.

வைத்தியசாலைகள் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு மருந்தகங்கள் இல்லை இல்லை 24 மணிநேரமும் இயங்கும் பொறுப்பு வாய்ந்த மருந்தங்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...