tamilni 17 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்

Share

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட பட்டதாரிகளில் பெண்கள் 41 பேரும் ஆண்கள் 2,299 பேரும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கடந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை விட உயர்கல்வி பெற்ற 121 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 8420 ஆகும்.

சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 7168 ஆகும். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லாதவர்களாகும், அவர்களின் எண்ணிக்கை 836 பேராகும்.

கடந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தியடைந்த 6,747 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட மொத்த 30,331 கைதிகளில் 17,928 பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்பதையும் இந்தத் தரவு காட்டுகிறது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...