tamilni 17 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்

Share

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட பட்டதாரிகளில் பெண்கள் 41 பேரும் ஆண்கள் 2,299 பேரும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கடந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை விட உயர்கல்வி பெற்ற 121 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 8420 ஆகும்.

சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 7168 ஆகும். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லாதவர்களாகும், அவர்களின் எண்ணிக்கை 836 பேராகும்.

கடந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தியடைந்த 6,747 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட மொத்த 30,331 கைதிகளில் 17,928 பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்பதையும் இந்தத் தரவு காட்டுகிறது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...