tamilni 394 scaled
இலங்கைசெய்திகள்

நாடு மீண்டும் வங்குரோத்து அடையும்

Share

நாடு மீண்டும் வங்குரோத்து அடையும்

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தங்களது கணித அறிவினை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை வியட்னாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகமாக அறவீடு செய்பய்படுவதனால் கைத்தொழிற்துறை பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் மற்றம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் நாடு வங்குரோத்து அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மின்சார சபையின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...