இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Share
Share

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Announcement By Ministry Of Education To Schools

நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சு (Ministry Of Health) இது குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அதிக வெப்பமான நாட்களில் மாணவர்கள் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் வலுவான சூரிய ஒளியுடன் வெளியில் நேரத்தை செலவிடுவதும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக நீர் பருகுவது மற்றும் சோர்வை நீக்குவதற்காகவும் இரண்டு குறுகிய ஓய்வு நேரங்களை வழங்குவது சிறந்ததாகும்.

அதிக வெப்பமான நேரங்களில் தேவையற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல் (பாடசாலை மற்றும் வீடு).

அதிக வெப்பமான நாட்களில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் தவிர்த்தல்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...