25 2
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் ஜனாதிபதியால் அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் ஜனாதிபதியால் அறிவிப்பு

சமகால அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தற்சமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதில் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கென பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் திட்டங்கள் அழமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒவ்வொரு பிரிவினரையும் இலக்கு வைத்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டங்களை முன்வைத்து வரும் நிலையில், அது குறித்து பலரும் வரவேற்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த அரசாங்களின் தூர நோக்கற்ற சிந்தகைளில் இருந்து மாறுபட்டு, தேவையற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் மாணவர் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயக பகுதிகளிலுள்ள வளங்களையும் மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...