இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் ஜனாதிபதியால் அறிவிப்பு

Share
25 2
Share

நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகள் ஜனாதிபதியால் அறிவிப்பு

சமகால அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தற்சமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதில் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கென பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் திட்டங்கள் அழமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒவ்வொரு பிரிவினரையும் இலக்கு வைத்து இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்டங்களை முன்வைத்து வரும் நிலையில், அது குறித்து பலரும் வரவேற்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த அரசாங்களின் தூர நோக்கற்ற சிந்தகைளில் இருந்து மாறுபட்டு, தேவையற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் மாணவர் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயக பகுதிகளிலுள்ள வளங்களையும் மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...