10 24
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாயப்போகும் சட்டம்!

Share

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாயப்போகும் சட்டம்!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்படமாட்டாரா? அல்லது காவல்துறை அதற்கு அஞ்சுகிறதாக என கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இவ்வாறு பதில் அளித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்கப்படாது, அவர் மிக உயர்ந்த நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர்.

அவரது நடத்தைகள் மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதைத்தான் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.எனவே அவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும்.

எனினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் காவல்துறை சட்டநடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...