4 8
இலங்கைசெய்திகள்

வடக்கு வைத்தியசாலைகளில் தொடர் மருத்துவ கொலைகள் : சுகாதார அமைச்சை நோக்கி அர்ச்சுனா சரமாரி கேள்வி

Share

வடக்கு வைத்தியசாலைகளில் தொடர்ந்து இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் இதுவரையும் சுகாதார அமைச்சு (Ministry of Health) எந்தவித முறையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archuna Ramanathan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் (Mannar) வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா தொடர்பில் கேள்வியெழுப்பியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், சம்மந்தப்பட்ட அதிகரிகளையோ அல்லது வைத்தியர் மற்றும் தாதியர்களையோ அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஒரு கேள்விக்கும் உட்படுத்தவில்லை.

இன்று வரையும் அது குறித்து எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை தற்போது அந்த குழந்தை தாயும் தந்தையும் இல்லாமல் நிற்கின்றது.

அதேபோலத்தான், கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலையும் ஒரு சிசு உயிரிழந்தது, ஆனால் அது தொடர்பிலும் சுகாதார அமைச்சு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுகாதார அமைச்சருக்கு நான்றாக தெரியும் யாழ் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) என்பது வடக்குக்கு மட்டும் அல்ல தெற்கிற்குமே ஒரு பிரதான வைத்தியசாலை.

இது தொடர்பில் நான் ஜனாதிபதி வரை எனது கருத்தை நான் கொண்டு சென்றிருக்கின்றேன், எனது தந்தை முதல் இன்று வரை எமது எத்தனையோ மக்கள் வைத்தியசாலைகளில் இருந்து காணாமலாக்கப்பட்டு வந்துள்ளனர்.

எப்போதும், இது தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, முள்ளிவாய்க்காலில் படுகொலை நடக்கவில்லை என தெரிவித்தவர்களை பார்த்து கேட்கின்றேன், தற்போது அதே நிலை வைத்தியசாலைகளில் தொடர்வது உங்களுக்கு தெரியவில்லையா ?

கேட்டாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதில் யாழ் தமிழனாக எனக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.

தற்போதும் கூட யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இருந்த ஒரு சிங்கள தாதியர் அவசரமாக தெற்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நான் கேள்வி எழுப்பினால் நான் இனம் மற்றும் மதம் என கதைப்பதாக தெரிவிக்கின்றனர்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...