14 5
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (04) அதிகாலைவேளை வந்திறங்கிய இளம் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு(colombo) தெமடகொடவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். ரூ.39.3 மில்லியன் மதிப்புள்ள 262 எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (e-cigarettes)நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH 179 இல் இவர் வந்துள்ளார்.

இதன்போது காவல்துறை அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனையிட்டபோது 12,000 262 இ-சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார், பெப்ரவரி 7 ஆம் திகதி நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...