14
இலங்கைசெய்திகள்

உலகில் எந்தவொரு அரசியல் சட்சியும் செய்யாததை செய்த தேசிய மக்கள் சக்தி

Share

உலகில் எந்தவொரு அரசியல் சட்சியும் செய்யாததை செய்த தேசிய மக்கள் சக்தி

உலகில் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் செய்ய முடியாத காரியத்தை தேசிய மக்கள் சக்தி செய்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

ஜனதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியினாலும் இவ்வாறு செய்ய முடியாது

அனைத்து சம்பளங்களும் கட்சியின் நிதியத்தில் வைப்பிலிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமன்றி உலகில் எந்தவொரு அரசியல் கட்சியினாலும் இவ்வாறு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒழுக்க விதிகளைக் கொண்ட கட்சியே தேசிய மக்கள் சக்தி என தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு என ஒர் கலாசாரம் உள்ளதாகவும் நாம் எம்மை கவனித்துக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வாகனத்திற்கு எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணம் செலுத்துவதும் தமக்கு சுமையாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களே தமக்கு உணவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்சி உதவினால் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வழங்கப்படும் சம்பளத்தை தனியாக எடுத்துக் கொள்வதும், கட்சி நிதியத்தில் வைப்புச் செய்து அங்கிருந்து பெற்றுக்கொள்வதும் வேறு வேறு விதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...