4 61
இலங்கைசெய்திகள்

குறைவடையப்போகும் தேங்காய் விலை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

குறைவடையப்போகும் தேங்காய் விலை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.

அதன்படி, தற்போது ரூ.250 அளவில் உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் ரூ.180 முதல் 200 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....