இலங்கைசெய்திகள்

ஜப்பானில் கிடைக்கப்போகும் வேலைவாய்ப்புகள்: மக்களுக்கு வெளியான நற்செய்தி

10 56
Share

ஜப்பானில் (Japan) தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் (IM Japan) இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தாதியர் வேலைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஐஎம் ஜப்பானின் தவிசாளர் கனமோரி ஹிட்டோஷி ஆகியோருக்கு இடையே இலங்கையர்களை ஜப்பானில் வேலைக்கு அனுப்புவதற்கான எதிர்கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளர் கோசல விக்ரமசிங்க, இலங்கைக்கு தாதியர் துறையைத் தவிர வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிகமான ஜப்பானிய வேலை வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனமோரி ஹிடோஷியும் உறுதியளித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...