9 54
இலங்கைசெய்திகள்

மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு: விஜேராம வீட்டில் குவியப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளுமாறு மகிந்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

அதனை உறுதிபடுத்தும் விதமாக அண்மையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உட்பட பலரும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும் ஒன்று சேருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்தியானது, பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...