இலங்கைசெய்திகள்

மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு: விஜேராம வீட்டில் குவியப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

9 54
Share

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளுமாறு மகிந்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

அதனை உறுதிபடுத்தும் விதமாக அண்மையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உட்பட பலரும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும் ஒன்று சேருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்தியானது, பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...