26 2
இலங்கைசெய்திகள்

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

Share

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...

25 68e756024d1e0
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு: டிசம்பர் 15 அன்று பரிசீலனை – 347 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார...

Parliament2020
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்றில் அமைச்சு ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களுக்கு ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (நவம்பர் 24),...