இலங்கைசெய்திகள்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

10 46
Share

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா (வயது 03) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு, அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது , மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கனேடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...