16 25
இலங்கைசெய்திகள்

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

Share

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சுவரில் சுதந்திர இலங்கையின் அனைத்து அரச தலைவர்களின் புகைப்படங்களும் அண்மைக்காலம் வரை கௌரவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மட்டுமே இருப்பதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் முன்னாள் அரசத்தலைவர்களான டி.எஸ்., டட்லி, சேர் ஜோன், பண்டாரநாயக்க, தஹநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால, கோட்டாபய, ரணில் போன்றோரின் வரிசையில் இருப்பதற்கு அநுரவும் தகுதியானவர் என கூறிய தென்னகோன், அநுரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVCJGuEkoPbB9Y2NvQE6p
உலகம்செய்திகள்

பெலாரஸ் பலூன்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: லித்துவேனியா அவசரநிலை அறிவிப்பு!

பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்களால் ஏற்படும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா நாடு தழுவிய...

25 69388f5211389
உலகம்செய்திகள்

ஜப்பானின் அமோரி மாகாணக் கடற்கரையில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!!

ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த...

d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae
உலகம்செய்திகள்

மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின்...

1700821783 police officer arrested l
இலங்கைசெய்திகள்

ரூ. 5,000 லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜென்ட், கொன்ஸ்டபிள் கைது!

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (டிசம்பர் 11) காலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு...