9 25
இலங்கைசெய்திகள்

இனிமேல் அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது! பிரதியமைச்சர் திட்டவட்டம்

Share

இலங்கைக்கு இனிமேல் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன நேற்று(11) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை இனியும் நீடிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இனிவரும் காலங்களில் இலங்கையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கான தேவையை ஒழித்து, நாட்டில் அரிசி தன்னிறைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...