இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1 12
Share

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்ப

அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தின் திட்டத்தின்படி மூன்று கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் சென்று கல்வி கற்கக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவது எமது நோக்கம்.

அதுபோன்ற பல பாடசாலைகளை இணைத்து முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாம் அவற்றை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறான அனைத்து பாடசாலைகளும் மீளாய்வு செய்யப்பட்டு 80 வீதமாக அல்லது 90 வீதமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த கட்டடங்களுக்கான நிர்மாண பணிகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பல பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் 50 விதமாகவும் 75 வீதமாகவும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....