1 4
இலங்கைசெய்திகள்

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

Share

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித முகாம்களை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.

எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித முகாம்கள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித முகாம்கள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடு செய்தமை பாரிய தவறு என வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதம செயலாளர் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணித முகாமை நடத்துவதற்கு தேவையான பணித்தாள்களை அச்சடித்ததாக போலி பில்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த கணித முகாம்களை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...