19 10
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Share

அநுர அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் விதிகளின்படி, நாளை (14) சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.

இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 10.02.2025 அன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி எண். 2423/04 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...