14 31
இலங்கைசெய்திகள்

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

Share

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.

இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை (JIA) விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.

எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை.

போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.

பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.

சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு சாத்தியக்கூறு ஆய்வையாவது மேற்கொண்ட விமான நிலைய ஆலோசனை நிறுவனங்கள் அல்லது கூட்டு முயற்சிகளில் இருந்து விலை மனுக் கோரப்பட்டது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...