11 25
இலங்கைசெய்திகள்

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

Share

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

முதன்முறையாக 180 பல்கேரிய(Bulgaria) சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று (27ம் திகதி) காலை 9.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தில்(mattala airport) தரையிறங்கியது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றுலா அமைச்சுக்கும் ஐரோப்பிய விமான சேவைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

கடந்த காலங்களில் மத்தள விமான நிலையம் அவசர தரையிறங்கும் இடமாக மட்டுமே மாறியிருந்தது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாரத்திற்கு 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் வந்து செல்கின்றன.

இதுவரை, மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் தொடர்புடைய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஆனால் தற்போது ஐரோப்பிய விமான நிறுவனங்களும் சுற்றுலா பயணிகளை மத்தளவுக்கு அழைத்து வருகின்றன. மத்தளவில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழு மற்றும் விமான குழுவினரால் மத்தள விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...