4 50
இலங்கைசெய்திகள்

ஏனைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் : நிஹால் அபேசிங்க

Share

ஏனைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் : நிஹால் அபேசிங்க

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே (NPP) போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில் அதனை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது அணியில் உள்ள பங்காளிகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியாகவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோம்.

பாரம்பரிய அரசியல் முறைக்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகவே தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.

2024 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையில் கட்சி தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிக்கிறது.

அத்துடன், பொதுமக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் ஏனைய தேர்தல்களிலும் நாம் தேசிய மக்கள் சக்தியாகவே களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...