இலங்கைசெய்திகள்

ஏனைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் : நிஹால் அபேசிங்க

Share
4 50
Share

ஏனைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் : நிஹால் அபேசிங்க

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே (NPP) போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில் அதனை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது அணியில் உள்ள பங்காளிகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியாகவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோம்.

பாரம்பரிய அரசியல் முறைக்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகவே தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.

2024 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையில் கட்சி தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிக்கிறது.

அத்துடன், பொதுமக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் ஏனைய தேர்தல்களிலும் நாம் தேசிய மக்கள் சக்தியாகவே களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...