1 19
இலங்கைசெய்திகள்

சுயசரிதை எழுதும் ரணில் விக்ரமசிங்க

Share

சுயசரிதை எழுதும் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

1973ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் 1977ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார். தற்போதைய இலங்கை அரசியல்வாதிகளில் 1970ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்த மூத்த அரசியல்வாதியாக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தவிர்ந்த நாடாளுமன்றத்தின் ஏனைய அனைத்தப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

அத்துடன் இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியுற்று, வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் இந்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக இலங்கையை பொருளாதார சரிவில் இருந்து மீட்டெடுத்த திறமையான அரசியல் தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பாராட்டப்படுகின்றார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போதைக்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சொற்பொழிவாளராக அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் தனது கடந்த 50 வருடகால அரசியல் வாழ்க்கை குறித்த சுயசரிதையொன்றை எழுதும் முயற்சியில்அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...