1 15
இலங்கைசெய்திகள்

தனக்கு எதிராக 19 வழக்குகள் – சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

Share

தனக்கு எதிராக 19 வழக்குகள் – சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தமக்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்தார்.

இன்றை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அம்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) அறிவித்தல் விடுத்துள்ளது.

அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 16ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு அடுத்த வருடம்(2025) பெப்ரவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...