24 675f3b61c573d
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களின் போலி வேடம் கலைந்தது

Share

ஆசிரியர்களின் போலி வேடம் கலைந்தது

வடமத்திய மாகாணத்தில் (north central province) போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

கடந்த 1997ஆம் ஆண்டு தொடக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றுவதற்காக அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சேவைகளே நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்.

ஆசிரியர்களாக சேவையில் சேரும் போது சமர்ப்பிக்கப்பட்ட சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதம அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைச் சரிபார்க்க மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பட்டதாரிகள் சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்ததாக போலியான பட்டச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...