24 675f3b61c573d
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களின் போலி வேடம் கலைந்தது

Share

ஆசிரியர்களின் போலி வேடம் கலைந்தது

வடமத்திய மாகாணத்தில் (north central province) போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

கடந்த 1997ஆம் ஆண்டு தொடக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றுவதற்காக அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சேவைகளே நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்.

ஆசிரியர்களாக சேவையில் சேரும் போது சமர்ப்பிக்கப்பட்ட சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதம அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைச் சரிபார்க்க மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பட்டதாரிகள் சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்ததாக போலியான பட்டச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...

19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...

18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...