இலங்கைசெய்திகள்

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

5 19
Share

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka Ranwala) பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகரின் கல்வித்தகைமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் தாம் பதவியிலிருந்து விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்திருந்தார்.

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா (Prathibha Mahanamahewa) தெரிவித்திருந்தார்.

இதேவேளை புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளான எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...