5 19
இலங்கைசெய்திகள்

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

Share

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka Ranwala) பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகரின் கல்வித்தகைமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் தாம் பதவியிலிருந்து விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்திருந்தார்.

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா (Prathibha Mahanamahewa) தெரிவித்திருந்தார்.

இதேவேளை புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளான எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...