4 6
இலங்கைசெய்திகள்

இறக்குமதி வரியால் வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

Share

இறக்குமதி வரியால் வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இயந்திரத் திறனுக்கு ஏற்ப வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பிரதான வாகன இறக்குமதி நிறுவனங்களின் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.

இந்த விளம்பரங்களினால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் அவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பயன்படுத்திய வாகனங்களை விட புதிய இறக்குமதி வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த பத்திரிகை விளம்பரங்களில் வெளியாகும் விலையில் வாகனங்களை வாங்க முடியாது எனவும் வாகன இறக்குமதி வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, 80 முதல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்ட Toyota RAIZE கார் சுமார் 170 இலட்சம் ரூபாய் என்றும், 40 முதல் 50 இலட்சம் ரூபாய் வரை விற்கப்பட்ட AQVA கார் 100 இலட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...