23 2
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற வார சபை அமர்வு இன்றையதினம் (03.12.2024) சபாநாயகர் அசோக ரங்வல (Ashoka Ranwala)தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாரு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து ரெிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா?

இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.

நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உர மானிய விடயத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரணிலின் பாதையில் பயணிக்காது தேர்தல் மேடையில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்கட்சி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...