6 1
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Share

அநுர அரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய வசந்த சமரசிங்க, “ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வீட்டையும் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளார்கள், எங்கள் அமைச்சர்கள் யாரும் வீடுகள் கேட்கவில்லை, உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தங்குவதற்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் வீடு வழங்கப்படுகிறது.

அமைச்சராக எனக்கு மூன்று வி8 வாகனங்கள் கிடைக்கின்றன. ஆனால் நான் அவற்றில் எதையும் பயன்படுத்துவதில்லை.

சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துடைய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக ஒழிக்கப்படும்” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...