3
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

Share

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

கொழும்பு – பொல்காசோவிட பிரதேசத்தில் கார் பழுதுபார்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லேண்ட் ரோவர் ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன பழுதுபார்க்கும் இடத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேச விகாரை விஹாராபதி ஒருவர் இந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை வழங்கி சென்றதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வாகனத்தை திருத்துவதற்கான தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர் என கூறப்படும் விஹாராபதி அவ்வப்போது வந்து வழங்கி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வாகனத்தை வழங்கியதாக கூறப்படும் விகாரை விஹாராபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ​​குறித்த ஜீப் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...