3
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

Share

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

கொழும்பு – பொல்காசோவிட பிரதேசத்தில் கார் பழுதுபார்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லேண்ட் ரோவர் ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன பழுதுபார்க்கும் இடத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேச விகாரை விஹாராபதி ஒருவர் இந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை வழங்கி சென்றதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வாகனத்தை திருத்துவதற்கான தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர் என கூறப்படும் விஹாராபதி அவ்வப்போது வந்து வழங்கி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வாகனத்தை வழங்கியதாக கூறப்படும் விகாரை விஹாராபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ​​குறித்த ஜீப் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...