14 24
இலங்கைசெய்திகள்

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

Share

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை குறைப்பதாக கொள்கைப் பிரகடனத்தில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் கட்சி கொள்கை பிரகடனத்தில் தெளிவான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சம்பளங்களை குறைக்குமாறு தம்மால் கோர முடியாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் தமது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர் எனவும் அவர்கள் சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சி தமக்கு போதுமானளவு கொடுப்பனவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...