11 20
அரசியல்இலங்கை

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

Share

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) சட்டத்துறையில் 41 வருட சேவையை நிறைவு செய்து இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது நாட்டின் சட்டமா அதிபராக பணியாற்றினார். ஜயந்த ஜயசூரிய 1983 ஆம் ஆண்டு அரசாங்க சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டார்.

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை கௌரவிக்கும் சம்பிரதாய ரீதியிலான விசேட உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி உச்ச நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

சிறுவர்களை தேடி நாடு முழுவதும் நடந்த தேடுதல் நடவடிக்கை

யாசகம் கேட்டல் மற்றும் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
இலங்கைசெய்திகள்

நாணயத்தாள்களை பயன்படுத்தும் மக்களுக்கான அறிவுறுத்தல்

கண்டி – ஹதரலியத்த பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

கொழும்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம, உரணாவ,...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து மைத்திரி விளக்கம்

ஊழல் மோசடி குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் அளித்துள்ளார். அனுராதபுரம் எப்பாவெல...