12 9
இலங்கைசெய்திகள்

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Share

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான கம்பஹாவில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், டிசம்பரில், அடுத்த நான்கு மாதங்களுக்கான துணை மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடு புதிய பொருளாதார திசைக்கு கொண்டு செல்லப்படும்.

ஓய்வூதியர்களின் கொடுப்பனவு ஏற்கனவே ரூ.3000 உயர்த்தியுள்ளோம். இழப்பீடு பெறுவதற்கு வேறு குழு உள்ளதா என பரிசீலனை செய்யப்படுகிறது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் ஈட்டும்போது வரி நியாயமான விலக்குக்குக் கொண்டுவரப்படும் என்றார்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...