3 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

Share

கொழும்பு – தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் (12) முதல் குறித்த தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் (Sri Lankan Railway Department) தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான முதலாவது தொடருந்து, செவ்வாய்க்கிழமை மாலை 4:15 இற்கு புறப்படும் எனத் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே (N.J. Indipolage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேர அட்டவணையின்படி, குறித்த தொடருந்து இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு – யாழ்ப்பாணம் (Jaffna) இடையிலான தொடருந்து சேவை கடந்த 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன் யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை கடந்த 2ம் திகதி முதல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...