4 7
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அநுர அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நன்மை

Share

அமெரிக்காவின் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அநுர அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நன்மை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வருவது, இலங்கையின் தேசிய பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என பொருளாதார மற்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டமை இலங்கைக்கும் முக்கியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியுடர் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை முன்னைய அழுத்தங்களில் இருந்து விடுவிக்க முடியும். ட்ரம்பின் வெற்றி இலங்கையில் பொருளாதாரத்திற்கும் சாதகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கையை அமுல்படுத்துவதற்கு ட்ரம்ப்பிடம் இருந்து எந்த அழுத்தமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொருளாதார ரீதியாக பலமான அமெரிக்காவை எதிர்பார்க்க முடியும் எனவும் அதேவேளை உலகளாவிய தலையீடுகள் மீதான போக்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் உலகம் முழுவதும் நடந்தவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போதைய ஜனநாயக கட்சியின் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார அழுத்தங்களில் இலங்கை போன்ற நாடுகள் தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இணக்கமான சூழலில் பேண முடியும்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி உலகிற்கு கொண்டு வந்த நிதி முதலாளித்துவத்தின் ஊடாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சுருங்க செய்தது. எனினும் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு கீழ் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வாய்ப்பு குறைவாக காணப்படும்.

அதன் மூலம், அமெரிக்க நிதிப் பொருளாதாரம் மற்றும் அதை வழங்கும் துறைகளின் சிக்குண்டுள்ள சகாப்தம் முடிவுக்கு வரலாம்.

நமது நாடு நிதிப் பொருளாதாரத்தை விட, உற்பத்திப் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும் அவர் தெரிவித்தார்.

எமது வெளிவிவகாரக் கொள்கையை அமுல்படுத்தி இலங்கையின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கிழக்கு, மேற்கு மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களுடனும் செயற்படுவதன் மூலம் நிதியமைப்பை வலுப்படுத்தவும் முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...