12 4
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசியின் விலை தொடர்பில் அரிசி ஆலையாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் (Moneragala) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமைக் காரணமாக, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வழியும் இருக்கவில்லை.

எனவே அரசின் நெல் கையிருப்புகளை விடுவிப்பது அல்லது சட்டங்களை இயற்றுவதன் மூலமோ அரிசி விலையை கட்டுப்படுத்துவது என்பனவே அரசாங்கத்திடம் உள்ள இரண்டு தெரிவுகளாகும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசிடம் நெல் கையிருப்பு இல்லாததால் அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, எதிர்வரும் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...