12 4
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

Share

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசியின் விலை தொடர்பில் அரிசி ஆலையாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் (Moneragala) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமைக் காரணமாக, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வழியும் இருக்கவில்லை.

எனவே அரசின் நெல் கையிருப்புகளை விடுவிப்பது அல்லது சட்டங்களை இயற்றுவதன் மூலமோ அரிசி விலையை கட்டுப்படுத்துவது என்பனவே அரசாங்கத்திடம் உள்ள இரண்டு தெரிவுகளாகும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசிடம் நெல் கையிருப்பு இல்லாததால் அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதன்படி, எதிர்வரும் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...