3 2
இலங்கைசெய்திகள்

ஜப்பானின் உதவியுடன் மத்திய அதிவேகப்பாதை பணிகள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

Share

ஜப்பானின் உதவியுடன் மத்திய அதிவேகப்பாதை பணிகள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (02.11.2024) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குட் செட் பேருந்து நிலையம் போன்ற பெரும்பாலான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடுகஸ்தோட்டை, பேராதனை, தென்னகும்புர ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டபோதும், அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், விரைவில் இந்த கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...