இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share
11
Share

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

நிதித்திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிடுதல் மற்றும் நிதி திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு போதியளவு தெளிவு கிடையாது எனவும், போதியளவு தெளிவற்ற அரசாங்கம் ஊடகங்கள் மீதோ அல்லது வேறும் தரப்பினர் மீதோ குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பரத்தலமுல்ல சீலரதன தேரருக்குக் கூட நிதி திரவத்தன்மை பற்றிய தெளிவு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் போதியளவு தெளிவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்பில் உதய ஆர் செனவிரட்ன அறிக்கை தொடர்பில் போலி தகவல் வெளியிட்டமைக்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசியல் சாசனம் பற்றி அவர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...