11 29
இலங்கைசெய்திகள்

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

Share

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவக் கப்டன் ஒருவர் கந்தானை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாயை சுட பயன்படுத்திய ஏர் ரைபிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கந்தானை பொல் பிட்டிமூகலனை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

 

நாயின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

 

இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அடிக்கடி வந்து குரைத்ததால் தூக்கம் கூட வராது என நாய் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளமை தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...