11 29
இலங்கைசெய்திகள்

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

Share

அயல் வீட்டு வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவக் கப்டன் ஒருவர் கந்தானை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாயை சுட பயன்படுத்திய ஏர் ரைபிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கந்தானை பொல் பிட்டிமூகலனை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

 

நாயின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

 

இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அடிக்கடி வந்து குரைத்ததால் தூக்கம் கூட வராது என நாய் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளமை தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...