5 52
இலங்கைசெய்திகள்

அறுகம் குடா விவகாரத்தை வைத்து எதிர் தரப்புகள் வகுக்கும் திட்டம்: அநுர குற்றச்சாட்டு

Share

அறுகம் குடா விவகாரத்தை வைத்து எதிர் தரப்புகள் வகுக்கும் திட்டம்: அநுர குற்றச்சாட்டு

அறுகம் குடா சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர்.

இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை. எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது. எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள். எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள்.

இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அறுகம் குடா சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்’’ என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 2 7
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய...

1616764671 preschool 2
செய்திகள்இலங்கை

பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!

நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை முதல் (நவம்பர் 28)...

images 8 1
செய்திகள்இலங்கை

கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள்...

images 7 1
இலங்கைசெய்திகள்

பதுளை, கண்டி மண்சரிவுகள்: 24க்கும் மேற்பட்டோர் பலி; 170 வீடுகள் முழுமையாகச் சேதம் – பேரிடர் மையம்!

நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள்...