இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

11 27
Share

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, CEB அண்மையில் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

 

முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று PUCSL அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக PUCSL நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

ஆணைக்குழுவுக்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.

 

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

 

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...