8 39
இலங்கைசெய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

Share

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

என்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறாத ஜனாதிபதிதான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில்(Negombo) இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி, மூன்று மாதமா அல்லது மூன்று வாரமா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anurakumara Dissanayakara) பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அவர் நாட்டையும் நாடாளுமன்றத்தையும் கொண்டுச் செல்ல முடியும்.

தேர்தலில் தோற்றால் வீட்டிலேயே இருங்கள் என்று என்னைப் பார்த்துச் சொல்கின்றார்கள். ஆமாம், நான் தேர்தலில் தோற்றேன். அதை ஏற்றுக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்து மக்களிடம் ஆணையை கேட்டேன். ஆனால் பெரும்பான்மை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் 51 சதவீத வாக்குளைப் பெறவில்லை. அவருக்கும் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. எனவே அவரும் என்னைப் போலத்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...