8 39
இலங்கைசெய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

Share

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

என்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறாத ஜனாதிபதிதான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில்(Negombo) இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி, மூன்று மாதமா அல்லது மூன்று வாரமா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anurakumara Dissanayakara) பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அவர் நாட்டையும் நாடாளுமன்றத்தையும் கொண்டுச் செல்ல முடியும்.

தேர்தலில் தோற்றால் வீட்டிலேயே இருங்கள் என்று என்னைப் பார்த்துச் சொல்கின்றார்கள். ஆமாம், நான் தேர்தலில் தோற்றேன். அதை ஏற்றுக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்து மக்களிடம் ஆணையை கேட்டேன். ஆனால் பெரும்பான்மை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் 51 சதவீத வாக்குளைப் பெறவில்லை. அவருக்கும் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. எனவே அவரும் என்னைப் போலத்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...